இஷாரா செவ்வந்தியை இந்தியாவுக்கு கொண்டு சென்ற படகு ஓட்டுனர் யாழ்ப்பாணத்தில் கைது

‘கனேமுல்ல சஞ்சீவா’ கொலைவழக்கின்  முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியை இந்தியாவிற்கு கொண்டு சென்றதாக கூறப்படும் படகும் அதின் ஓட்டுனரும் கொழும்பு குற்றப்பிரிவு (CCD) அதிகாரிகளால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலீஸ் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் அரலித்தூடுவா கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட அந்தப் படகு 400 ஹார்ஸ் பவர் என்ஜினுடன் கூடிய சிறிய கப்பலாகும். அது A. ஆனந்தன் என்ற நபருக்குச் சொந்தமானதாகும், அவர் இஷாராவை இந்தியாவிற்கு தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படுகிறது.

CCD அமைப்புசார் குற்றப்பிரிவு அதிகாரிகள் குழு, அந்த பிரிவின் OIC தலைமையில் ஆனந்தனை நீண்ட நேர விசாரணைக்கு உட்படுத்தியதையடுத்து, ஓட்டுனரையும் படகையும் கண்டறிந்து காவலில் எடுத்துள்ளனர்.